தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் - 32-ம் கட்ட விசாரணை நிறைவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் மாதத்தில் தொடங்க ஆணையம் முடிவு செய்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் - 32-ம் கட்ட விசாரணை நிறைவு
x
32-ம் கட்ட விசாரணை, கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இதில், ஒரு மருத்துவர், போலீஸ் என மொத்தம், 41-பேருக்கு ஆணை சம்மன் அனுப்பிய நிலையில், 40-பேர் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். இதையடுத்து, இந்த விசாரணை  நிறைவடைந்தது.  அடுத்த கட்டமாக, 33-ம் கட்ட விசாரணை டிசம்பர் மாதம் 13-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறும் என ஆணையம் தெரிவித்துள்ளது. இதேபோல், 34-ம் கட்ட  விசாரணையும், டிசம்பர் மாதம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, துப்பாக்கி சூட்டின் போது, பணியில் இருந்த  போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் அப்போதைய  மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பவும், ஆணையம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்