"முதலீடுகள் ஈர்க்க திட்டம்" - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கம் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட ஆலோசனை குழு கூட்டம், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் சென்னையில் நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கடந்த 6 மாதங்களில் தகவல் தொழில்நுட்பத்துறை பல்வேறு வளர்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ELCOT மூலம் முதலீடுகளை ஈர்த்து, வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதிப்படுத்துவதே அரசின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Next Story