வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முகாம் - வாக்குச்சாவடிகளில் இன்று நடைபெறுகிறது

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான கூடுதல் சிறப்பு முகாம்கள் இன்று நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முகாம் - வாக்குச்சாவடிகளில் இன்று நடைபெறுகிறது
x
தமிழகத்தில் கடந்த 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் சிறப்பு வாக்காளர் முகாம் நடைபெற்றது. இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பாதிப்பு ஏற்பட்டதால், இன்று மீண்டும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள விரும்புகிறவர்கள், வாக்குச்சாவடிகளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரும் ஜனவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்