சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை - குண்டர் சட்டத்தின் கீழ் இருவர் கைது
ஜெயங்கொண்டம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த இருவரை, குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெயங்கொண்டம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த இருவரை, குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம், கோடாலிகருப்பூரை சேர்ந்த செல்வ கணபதி,13 வயது சிறுமியை கட்டாயபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்தும், அதனை வீடியோ எடுத்தும் மிரட்டி வந்துள்ளார். அதேபோன்று, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயன் என்பவர், வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்த நிலையில், இவர்களை குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டார்.
Next Story