நிரம்பி வழியும் நாராயணபுரம் ஏரி - நேரில் ஆய்வு செய்தார் முதல்வர்
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரியில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகள், கரைகளை பலப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டார். பின்னர் வெள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story