ஆர்யன் கானிற்கு ஜாமின் மறுப்பு - நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்

போதைப் பொருள் வழக்கில் கைதாகியுள்ள ஷாருக் கான் மகன் ஆர்யன் கானிற்கு, ஜாமின் வழங்கப்படாததற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
ஆர்யன் கானிற்கு ஜாமின் மறுப்பு - நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்
x
ஆர்யன் கானிற்கு ஜாமின் மறுப்பு - நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்

போதைப் பொருள் வழக்கில் கைதாகியுள்ள ஷாருக் கான் மகன் ஆர்யன் கானிற்கு, ஜாமின் வழங்கப்படாததற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், முந்த்ரா துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்று கூறி உள்ளார். ஷாருக் கானின் மகன் என்பதாலேயே, இவ்வழக்கில் ஆர்யன் கான் சிக்க வைக்கப்பட்டுள்ளார் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை என்று கூறியுள்ள சீமான், இஸ்லாமியர் என்பதாலேயே ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானைக் குறிவைப்பதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்