வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - 2-வது நாளாக ஆஜரான எம்.ஆர்.விஜயபாஸ்கர்

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு - 2-வது நாளாக ஆஜரான எம்.ஆர்.விஜயபாஸ்கர்
x
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து பல முக்கிய கேள்விகள் கேட்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த ஜூலை 26ஆம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இறுதியில், கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணம், சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை ஆவணங்களைப் பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்