ஒகேனக்கலுக்கு வரக்கூடிய நீர் வரத்து 37,000 கன அடியாக அதிகரிப்பு
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு வரக்கூடிய நீர் வரத்து அதிரடியாக 37 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
ஒகேனக்கல் சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று மாலை நிலவரப்படி, 7 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று காலை சுமார் 37 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story