ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரி வழக்கு - விசாரணை வரும் 26ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரிய வழக்கின் விசாரணையை வரும் 26ஆம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை கோரிய வழக்கின் விசாரணையை வரும் 26ஆம் தேதி உச்சநீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. இந்த வழக்கில் அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரும் தமிழக அரசின் இடையீட்டு மனு மீதான விசாரணை தள்ளிவைக்க வேண்டும், காணொலி வாயிலாக இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு முன் முறையிடவும் அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
Next Story