முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா - அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள்

திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில், தசரா திருவிழா இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
x
திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில், தசரா திருவிழா இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பால், மஞ்சள், விபூதி, தேன், உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுடன், அம்மனுக்கு மகா தீபாராதனையும் காட்டப்பட்டது. இரவு 11.35 மணி அளவில், சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி சூரசம்ஹார நிகழ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்