வெள்ளி, சனி, ஞாயிறு - வழிபாட்டு தலங்கள் திறப்பு
வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்து அரசு உத்தரவி ட்டுள்ளது.
வரும் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், பண்டிகை காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதன் அடிப்படையில் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் அனைத்து வகையான கடைகள், உணவகங்கள் இரவு 11 மணி வரை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களும் மக்கள் வழிபட அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், இன்று முதல் தனிப்பயிற்சி நிலையங்கள் செயல்படவும், அரசு, தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் செயல்படவும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
Next Story