பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழப்பு - மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

சென்னையில் மருத்துவரின் அலட்சியத்தால் பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழப்பு - மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்
x
சென்னை தேனாம்பேட்டை திரு.வி.க. நகர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி பிரதீபாவுக்கு திடீரென பிரசவ வலி எடுத்த நிலையில்,  அவரது உறவினர்கள் தேனாம்பேட்டையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். பிரதீபாவுக்கு  சுகப்பிரசவம் நடக்க மருத்துவர்கள் முயற்சி செய்தி வந்தனர். ஆனால் திடீரென பிரதீபாவின் உடல்நிலை மோசமாக இருப்பதாக கூறி கணவர் உட்பட யாரிடமும் தெரிவிக்காமல் பிரதீபாவுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் சற்று நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி பிரதீபா உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள், பிரதீபாவின் மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்