சிறுமிகளை குறிவைத்து பழகும் நபர்கள் - ஆபாச வீடியோ, புகைப்படம் அனுப்பி அத்துமீறல்

சிறுமிகளை குறிவைத்து பழகும் நபர்கள் - ஆபாச வீடியோ, புகைப்படம் அனுப்பி அத்துமீறல்
சிறுமிகளை குறிவைத்து பழகும் நபர்கள் - ஆபாச வீடியோ, புகைப்படம் அனுப்பி அத்துமீறல்
x
சிறுமிகளை குறிவைத்து பழகும் நபர்கள் - ஆபாச வீடியோ, புகைப்படம் அனுப்பி அத்துமீறல் 

ஆன்லைனில் மூழ்கி இருக்கும் சிறுமிகளை குறி வைத்து, ஆபாச படம் மற்றும் வீடியோ அனுப்பி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஆன்லைனில் பாலியல் அத்துமீறல் குறித்து மதுரையை சேர்ந்த பெற்றோர் அளித்த புகாரின்பேரில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம், மகாராஜா இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களின் செல்போன்களை ஆய்வு செய்ததில், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும்  பெண்களின் ஆபாச புகைப்படம், வீடியோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. ஆன்லைனில் அதிகமாக இருக்கும் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு முதலில் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். இதற்கு பதில் அளிப்பவர்களிடம் குறுஞ்செய்தி மூலம் நண்பர்கள் போல பழகி, ஒரு கட்டத்தில் தங்களது காம களியாட்டத்தை தொடங்குகின்றனர். சிறுமிகளுக்கு ஆபாச புகைப்படம், வீடியோ பகிர்ந்து, அவர்களையும் இதே போன்று எடுத்து அனுப்பும்படி கூறுகின்றனர். அவர்கள் அனுப்பும் ஆபாச புகைப்படம், வீடியோ வைத்து மிரட்டி சிறுமிகள், பெண்களிடம் பாலியல் சீண்டலில், இருவரும் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இது போன்ற மோசடி நபர்களிடம் பெண்கள், சிறுமிகள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்