ராட்சத அலையில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு - கரை ஒதுங்கிய கல்லூரி மாணவனின் உடல்

ராட்சத அலையில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு - கரை ஒதுங்கிய கல்லூரி மாணவனின் உடல்
x
ராட்சத அலையில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு - கரை ஒதுங்கிய கல்லூரி மாணவனின் உடல்

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று ராட்சத அலையில் சிக்கிய தனியார் கல்லூரி மாணவர், இன்று உயிரிழந்தார். மெரினா கடற்கரைப் பகுதியில் நேற்று மதியம் 12க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குளித்துள்ளனர். அப்போது 3 பேர் ராட்சத கடல் அலையில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளனர். அலையில் சிக்கிய  இரண்டு பேரை பொது மக்களும் மீனவர்களும்  காப்பாற்றியுள்ளனர். இந்த நிலையில் நாமக்கல்லை சேர்ந்த கோகுல் என்பவர் கடலில் இழுத்து செல்லப்பட்டார். இந்நிலையில் அவரது உடல் இன்று அதிகாலை கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் கடல் அலையில் மிதந்த கோகுலின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்