பேருந்தில் லக்கேஜ் கட்டும் கயிறால் நடந்த விபத்து - அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்

பேருந்தில் லக்கேஜ் கட்டும் கயிறால் நடந்த விபத்து - அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்
x
பேருந்தில் லக்கேஜ் கட்டும் கயிறால் நடந்த விபத்து - அதிர்ச்சியை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்

சென்னையில் தனியார் பேருந்தில் லக்கேஜ் கட்டும் கயிறு விழுந்ததில் அடுத்தடுத்து விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை வேப்பேரி ஈவெரா சாலையில் சென்ற தனியாருக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மேலே லக்கேஜ்களை கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கயிறானது கீழே விழுந்துள்ளது.. பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்த போது தீடீரென அந்த கயிறு சாலையில் செல்லும் வாகனங்களில் சிக்கி விபத்தை ஏற்படுத்தியது. இதில் சிக்னலில் இருந்த போக்குவரத்து காவலருக்கான நிழற்குடை தூக்கி எறியப்பட்டது. இதில் போக்குவரத்து காவலரான ஆதிசேஷன் காயமடைந்தார். அதேபோல் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்