பல்கலை. காலி பதவியிடங்கள் - நீதிமன்றம் உத்தரவு

பல்கலை. காலி பதவியிடங்கள் - நீதிமன்றம் உத்தரவு
பல்கலை. காலி பதவியிடங்கள் - நீதிமன்றம் உத்தரவு
x
பல்கலை. காலி பதவியிடங்கள் - நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவிகள் எப்போது நிரப்பப்படும் என பல்கலைக்கழகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2015ஆம் ஆண்டு முதல் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவிகள் காலியாக உள்ளதாகவும்,தற்காலிகமாக நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த பதவிகளை நிரப்ப உத்தரவிட வேண்டும் என புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதி கேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில், பொறுப்பு பதிவாளராக உள்ளவரை, பதிவாளராக நியமிக்கவே, பதவி நிரப்பப்படாமல் உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், இந்த பதவிகளை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்று, 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாகவும், பதவிகளை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, காலியாக உள்ள பதவிகள் எப்போது நிரப்பப்படும் என்பது குறித்து பல்கலைக்கழகம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள்,விசாரணையை அக்டோபர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்