மதுரை மேலமாசி வீதியில் முதலமைச்சர் - காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மதுரை மேலமாசி வீதியில் முதலமைச்சர் - காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
மதுரை மேலமாசி வீதியில் முதலமைச்சர் - காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
 
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை மேலமாசி வீதியில் உள்ள காந்தி சிலைக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நூற்றாண்டு வரலாற்று சிறப்புடைய, காந்தி அரையாடை புரட்சி செய்த மதுரை மேலமாசி வீட்டிற்கு வந்த முதலமைச்சர்,  வீட்டின் முதல் தளத்தில், காந்தியின் நினைவாக வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்வையிட்டார். மேலும், காந்தி ஜெயந்தி மற்றும்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மேலமாசி வீதியில் கதர் ஆடைகள் கண்காட்சியையும், முதலமைச்சர் திறந்து வைத்தார். முன்னதாக, முதலமைச்சர் வருகையை முன்னிட்டு 4 மாசி வீதிகளிலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story

மேலும் செய்திகள்