15 வயது சிறுமியிடம் அத்துமீறிய பின் திருமணம் - திருமணம் செய்த பிறகும் ஏமாற்றிய சாமியார் கைது

15 வயது சிறுமியிடம் அத்துமீறிய பின் திருமணம் - திருமணம் செய்த பிறகும் ஏமாற்றிய சாமியார் கைது
15 வயது சிறுமியிடம் அத்துமீறிய பின் திருமணம் - திருமணம் செய்த பிறகும் ஏமாற்றிய சாமியார் கைது
x
15 வயது சிறுமியிடம் அத்துமீறிய பின் திருமணம் - திருமணம் செய்த பிறகும் ஏமாற்றிய சாமியார் கைது

சென்னையில்15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அவரை திருமணம் செய்து ஏமாற்றிய சாமியாரை போலீசார் கைது செய்தனர். குன்றத்தூர் நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவன் குமரன். இவர் அங்குள்ள அம்மன் கோவிலில் சாமியாராக உள்ளார். தன் அண்ணியின் தங்கையான 15 வயது சிறுமியை இவர் கடந்த 2015ல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அதே சிறுமியை குமரனின் குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். சிறுமியை தொடர்ந்து துன்புறுத்தி வந்த அவர், ஒரு கட்டத்தில் அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டதோடு வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதனிடையே சிறுமி 5 ஆண்டுகளுக்கு பிறகு பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதன்பேரில் குமரனை கைது செய்த போலீசார், அவரின் பெற்றோர், சகோதரர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்