விமானப்படை பெண் அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை - சக விமானப்படை அதிகாரி கைது

கோவை விமான படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
x
கோவை பந்தய சாலையில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் கடந்த 10ஆம் தேதி சக அதிகாரி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் அதிகாரி விமானப்படை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதில் நடவடிக்கை எடுக்க தாமதமானதாக கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காந்திபுரம் அனைத்து மகளிர் போலீசார் அமிர்தேஷ் என்ற விமானப்படை அதிகாரியை கைது செய்தனர். இதையடுத்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விமான படை அதிகாரி மீது போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாது என அமிர்தேஷ் தரப்பு வழக்கறிஞர் அபிடவிட் தாக்கல் செய்தார். இதையடுத்து, கோவை காவல் துறை சார்பில் பதில் அபிடவிட் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால், அதிகாரியை ஓரு நாள் மட்டும் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து உடுமலை கிளை சிறையில் அமிர்தேஷ் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்