கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - சதீஷன், பிஜின் குட்டி ஆஜர்

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சதீஷன், பிஜின் குட்டி ஆகியோரிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு - சதீஷன், பிஜின் குட்டி ஆஜர்
x
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை உதகையிலுள்ள பழைய காவல்துறை கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் நடந்து வருகிறது. நேரில் ஆஜர்படுத்தப்பட்ட சதிஷன் மற்றும் பிஜின்குட்டி ஆகியோரிடம் 8 மணி நேரம் விசாரணை நடந்தது.மேலும் நாளை 3-வது குற்றவாளி திபு மற்றும் 10வது குற்றவாளி ஜித்தின் ஜாய் விசாரணைக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  முன்னதாக முதல் குற்றவாளி சயான், எஸ்டேட் மேலாளர் நடராஜ், ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர் கனகராஜ்,கணினி ஆப்பரேட்டர் தினேஷின் தந்தை போஜன், தாயார் கண்ணகி, சகோதரி ராதிகா, ஜம்சீர் அலி உள்ளிட்டோரிடம் இதுவரை விசாரனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்