மாணவியின் உயிரை குடித்த நீட் - தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி

நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் வேலூரை சேர்ந்த மாணவி சவுந்தர்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
x
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்  சவுந்தர்யா. தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் படித்த இவர், 510 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். இதனிடையே இந்த ஆண்டு நீட் தேர்வையும் சவுந்தர்யா எழுதி இருந்த நிலையில் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் இருந்துள்ளார். இதனை தன் பெற்றோரிடம் சொல்லி கதறி அழுததாக கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த சவுந்தர்யா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளின் சடலத்தை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர். சடலத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சமீபத்தில் தனுஷ், கனிமொழி என 2 பேர் உயிரிழந்த நிலையில் இப்போது சவுந்தர்யாவின் உயிரையும் நீட் தேர்வு பறித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்