1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
 இந்நிலையில், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் பகுதியில் சுமார் ஆயிரத்து 800 க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்களும், 15 ஆயிரம் சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.



1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் : பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்றும் அதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் இரண்டாயிரம் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.



Next Story

மேலும் செய்திகள்