சொந்த ஊர் திரும்பிய மாரியப்பன் தங்கவேலு: உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்
பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு சொந்த ஊர் திரும்பினார். சேலம் சென்ற அவரை, மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில், ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, மேளதாளம் முழங்க தீவட்டிப்பட்டியில் இருந்து சொந்த ஊரான பெரியவடகம்பட்டி வரை மாரியப்பன் திறந்த ஜீப்பில் பயணித்தார். அப்போது, பொதுமக்கள் மற்றும் அவரது நண்பர்கள், வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story