பிரியாணி சாப்பிட்டு விட்டு தூங்கிய நாய் - சுலபமாக கொள்ளையடித்த கொள்ளையன்

பிரியாணி சாப்பிட்டு விட்டு அசந்து தூங்கிய நாய், கொள்ளையர்களை கோட்டை விட்டதால் 67 சவரன் நகைகள் பறிபோனது.
x
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், கோபுரச நல்லூர், ஐஸ்வர்யா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் பிரபாகர். டாக்டரான இவர், குடும்பத்துடன் அடையாறுக்கு சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது இவரது வீட்டின் பீரோவில் இருந்த 67 சவரன் நகைகள், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. வீட்டின் பாதுகாப்புக்காக வளர்ப்பு நாய் இருந்த போதிலும் கொள்ளை போனது எப்படி என கேள்வி எழுந்தது. சம்பவத்தன்று நாய்க்கு பிரியாணியை கொடுத்ததால் அதை சாப்பிட்ட மயக்கத்தில் நாய் தூங்கிப் போகவே கொள்ளையர்கள் கைவரிசை காட்டிவிட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. 

Next Story

மேலும் செய்திகள்