சூடுபிடிக்கும் கொடநாடு விசாரணை - கனகராஜ், தினேஷ்குமார் மரண வழக்குகள் மாற்றமா?

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், கொடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் மரண வழக்கை மாற்றம் செய்ய தனிப்படை போலீசார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூடுபிடிக்கும் கொடநாடு விசாரணை - கனகராஜ், தினேஷ்குமார் மரண வழக்குகள் மாற்றமா?
x
ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், கொடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் மரண வழக்கை மாற்றம் செய்ய தனிப்படை போலீசார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொடநாட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்த தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதாகவும், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் மரணமானது, விபத்து என்ற பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே கொடநாடு விவகாரத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இருவரின் மரணம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட பிரிவுகளை மாற்ற முடிவெடுக்கப் பட்டுள்ளது. அவ்வாறு வழக்குகளை மாற்ற முடிவெடுக்கும் பட்சத்தில் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்க வாய்ப்பு அதிகம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 



Next Story

மேலும் செய்திகள்