மலையை சுரண்டி கனிமவளம் திருட்டு - தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தேவச்சின்னாம்பட்டி செல்லும் வழியில் 45 ஏக்கர் பரப்பளவில் உள்ள வருவாய்துறைக்கு சொந்தமான சிறு மலைக்காடுகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக 15-க்கும் மேற்பட்ட கனரக வாகனத்தின் மூலமாக சிலர் மலையை சுரண்டி தரைமட்டமாக்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் மாவட்ட கனிமவள துறை அதிகாரியிடம் புகார் கொடுத்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட கனிம வள துறை அதிகாரிகள் மற்றும் வருவாய் ஆய்வாளர் நடத்திய ஆய்வில் அரசிடம் முறையாக அனுமதி பெறாமல் வேலை நடப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட வாகனங்களை உடனடியாக பணிகளை நிறுத்தும்படி வருவாய் ஆய்வாளர் உத்தரவு பிறப்பித்தார்.
Next Story