ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரி மனு

சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை செப்டம்பர் 16-ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை கோரி மனு
x
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான லஞ்ச ஒழிப்பு துறை வழக்கறிஞர், ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 73 சதவிகிதம் சொத்து சேர்த்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த மனு  வருகிற 16 ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்