நஷ்டத்தில் தமிழ்நாடு தேயிலை நிறுவனம்: "லாபத்தில் இயக்க 2 ஆண்டுகளில் நடவடிக்கை" - வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
நஷ்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு தேயிலை நிறுவனத்தை லாபத்தில் இயக்க 2 ஆண்டுகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் வனத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தின் போது பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், வன விலங்குகளால் உயிரிழக்கும் வன அலுவலர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிமுக ஆட்சிகாலத்தில் ஒருவருக்கு கூட வழங்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் வனத்துறை சார்ந்த அனைத்து நிறுவனங்களும் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ராமச்சந்திரன் உறுதியளித்தார்.
Next Story