மர்மமான முறையில் உயிரிழந்த யானை - யானை தந்தத்தை வெட்டியவர்கள் குறித்து விசாரணை
உடுமலை வனச்சரகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த யானையின் தந்தம் மீட்கப்பட்டுள்ளது.
உடுமலை வனச்சரகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த யானையின் தந்தம் மீட்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் கரட்டூர் சடையம்பாறை சரக வனபகுதியில் ஆகஸ்ட் 29 ம் தேதி ஒற்றை தந்தம் கொண்ட ஆண் யானை இறந்து கிடந்தது. யானை இறந்த பின் தந்தம் வெட்டி எடுக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று அதே பகுதியில் பாறை இடுக்கில் யானையின் தந்தம் ஒன்று சாக்குப்பையில் சுருட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தந்தத்தை கடத்த முயன்ற நபர்கள் குறித்து விசாரணை தொடர்கிறது.
Next Story