"தூத்துக்குடியில் பன்னாட்டு அறைகலன் பூங்கா" - தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
நாட்டிலேயே முதல்முறையாக தூத்துக்குடியில் பன்னாட்டு அறைகலன் பூங்கா ஆயிரத்து 100 ஏக்கரில் உருவாக்கப்படும் என்று தொழில்துறை கொள்கை விளக்க குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், முதற்கட்டமாக மணப்பாறை, திண்டிவனம் மற்றும் தேனி ஆகிய 3 இடங்களில் தலா 100 முதல் 150 ஏக்கர் பரப்பளவில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படுவதாக தொழில் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story