மத்திய அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டம்: திமுக சார்பில் பங்கேற்கும் திருச்சி சிவா

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து மத்திய அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா பங்கேற்க உள்ளார்.
மத்திய அரசு நடத்தும் அனைத்து கட்சி கூட்டம்: திமுக சார்பில் பங்கேற்கும் திருச்சி சிவா
x
 தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இந்தியர்களை மீட்பது குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து கட்சி தலைவர்களுடன்  மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது. இதற்காக நாடளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நாடாளுமன்ற குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் திமுக மாநிலங்களவை குழு தலைவராக இருக்கும் திருச்சி சிவாவுக்கு அழைப்பு வந்துள்ளதால் அனைத்து கட்சி கூட்டத்தில் அவர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்