10.5% இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை - தடைவிதிக்க அவசியம் இல்லை- தமிழக அரசு
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனம் மேற்கொள்ள ஏன் தடைவிதிக்க தேவையில்லை என தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 25க்கும் மேற்பட்ட மனுக்களில், தேர்தலுக்கு முன் அரசியல் லாபத்துக்காக சட்டம் இயற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
1983ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பின் படி,10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதாக தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அமர்வில், வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்யவும், 10.5 சதவிகித அடிப்படையில் நடைபெறும் நியமனத்தை தடுக்கும் வகையில் தடை விதிக்கவும் கோரப்பட்டது.
அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறிய அரசுத் தரப்பு, இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை என்பதால் தடைவிதிக்க அவசியம் இல்லை என வாதிட்டது.
10.5 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமனங்களுக்கு ஏன் தடைவிதிக்க தேவையில்லை என விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், நாளை இறுதி விசாரணைக்கான தேதி குறித்து முடிவு செய்வதாக கூறினர்.
Next Story