"மகப்பேறு விடுப்பு-பாகுபாடு கூடாது"

மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பாகுபாடு காட்டக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மகப்பேறு விடுப்பு-பாகுபாடு கூடாது
x
தமிழ்நாடு அரசின் தற்காலிக பணியாளருக்கான மகப்பேறு விடுப்பு குறித்த அரசாணையை அமல்படுத்த கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

இது தொடர்பான அரசாணையை முறையாக அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பொதுநல மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி கிருபாகரன் அமர்வு விசாரணை செய்தது. 

அப்போது மகப்பேறு விடுப்பு வழங்குவதில் பாகுபாடு காட்டக் கூடாது என்றும்.

 பணி வரன்முறை செய்யப்பட்ட, வரன்முறை செய்யப்படாத ஊழியர்களுக்கு ஒரே மாதிரியான விடுப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்