"அகில இந்திய ஒதுக்கீட்டில் 69% இட ஒதுக்கீடு விவகாரம்" - பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு

மருத்துவ படிப்பில், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் தமிழகத்தைபோல், 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளதாக கூறிய சென்னை உயர் நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டில் 69%  இட ஒதுக்கீடு விவகாரம் - பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு
x
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் 2020 ஜூலையில் உத்தரவிட்டது.

இதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்காமல், நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக திமுக தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அமைத்த குழு பரிந்துரைப்படி, அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி.க்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியதாக கூறினார். 

ஆனால், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை என குற்றம்சாட்டிய திமுக, அதை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யவே நீதிமன்றம் உத்தரவிட்டதாக, கூறியது.  

 வாதங்களை கேட்ட நீதிபதிகள், 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிட்டதாகவும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீடு மொத்த இட ஒதுக்கீட்டில் வருகிறதா? இல்லையா? என வினவினர்.

 இதற்கு பதிலளிக்க மத்திய அரசு தரப்பில் அவகாசம் வழங்க கோரியதை ஏற்று, வழக்கு விசாரணையை நீதிபதிகள் அடுத்த வாரம் தள்ளிவைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்