"பள்ளிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை" - சிவசங்கர் பாபா

சிவசங்கர் பாபா ஜாமின் கோரிய மனுவுக்கு வரும் 11 ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கும் தனக்கும் தொடர்பு இல்லை  - சிவசங்கர் பாபா
x
கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி மாணவிகளிடம் அத்துமீறியதாக சிவசங்கர் பாபா கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். இதனிடையே தனக்கு ஜாமின் வழங்கக்கோரி அவர் தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், மலிவான விளம்பரத்துக்காக மனுதாரர் புகார் அளித்துள்ளதாகவும், புகார் கொடுப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பாக பள்ளியில் நடந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பள்ளி விவகாரங்களில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும், 73 வயதான தனக்கு இதயநோய் உள்ளிட்ட பாதிப்பு உள்ளதால் ஜாமின் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, மனுவுக்கு ஆகஸ்ட் 11ம் தேதி பதிலளிக்கும்படி சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டார். மேலும், வழக்கு தொடர்பாக சாட்சிகளிடம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்