"கொங்கு மண்டலத்தை தலைமை ஏற்க வாரீர்.." - கோவை நகரில் ஒட்டப்பட்ட சசிகலா போஸ்டர்கள்

கோவை நகரில் சசிகலா ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
x
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். கொங்கு நாடு சர்ச்சை இன்னும் அடங்காத நிலையில், கொங்கு மண்டலத்தை வழிநடத்த வாரீர் என்று சசிகலாவிற்கு அழைப்பு விடுத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதிமுக நிர்வாகிகளுடன் செல்போனில் சசிகலா பேசி வரும் நிலையில், தற்போது போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவதால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்