சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான விருது மற்றும் ஊக்கத்தொகையை, முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான விருது மற்றும் ஊக்கத்தொகையை, முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், சிறந்த எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் 40 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. அதன்படி, 2018-2019 மற்றும் 2019-2020ஆம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. இதில், 21 பேருக்கு முதல் தவணையாக 20 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
Next Story