பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம்

பப்ஜி மதனை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
x
பப்ஜி மதனை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக விளையாடியது, சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் பப்ஜி மதன் கடந்த மாதம் 18ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் மதனின் மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார். மதனின் இணைய தள பக்கங்கள் முடக்கப்பட்டது. இந்த சூழலில் ஜாமினில் வெளியே வர முடியாதபடி மதனின் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்