கொரோனா ஒழிய வேண்டி சிறப்பு வழிபாடு - மூலிகைப் பொருட்களை கொண்டு அபிஷேகம்

மயிலாடுதுறை அருகே தான்தோன்றீஸ்வரர் கோவிலில், கொரோனா தொற்று ஒழிய வேண்டி, சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.
x
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஆக்கூரில் தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது.  இந்த கோவிலில் கொரோனா தொற்று ஒழிய வேண்டி பால், பன்னீர், தயிர் மற்றும் பல்வேறு மூலிகைபொருட்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 108 வகையான மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பு யாகங்களும் செய்யப்பட்டது.  இதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்