கிறிஸ்தவ திருச்சபையில் ரூ.5 கோடி பணம் கையாடல் என புகார்.. திருச்சபை முன்னாள் செயலாளர் கைது

விழுப்புரத்தில் கிறிஸ்தவ திருச்சபையில் 5 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
கிறிஸ்தவ திருச்சபையில் ரூ.5 கோடி பணம் கையாடல் என புகார்.. திருச்சபை முன்னாள் செயலாளர் கைது
x
கிறிஸ்தவ திருச்சபையில் ரூ.5 கோடி பணம் கையாடல் என புகார்.. திருச்சபை முன்னாள் செயலாளர் கைது 

விழுப்புரத்தில் கிறிஸ்தவ திருச்சபையில் 5 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டார். விழுப்புரத்தில் உள்ள கிறிஸ்தவ திருச்சபைக்கு சொந்தமான வணிக வளாகம் ஒன்று அண்மையில் விற்பனை செய்யப்பட்டது. இந்த பணத்தில் 5 கோடி ரூபாயை கையாடல் செய்த‌தாக முன்னாள் நிர்வாகிகள் மீது திருச்சபை பொருளாளர் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் ஞானராஜ் என்பவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திருச்சபையின் முன்னாள் செயலாளர் சார்லஸை தனிப்படை போலீசார் கும்பகோணத்தில் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய டேனியல், ஆல்பர்ட் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்