சிவகங்கை கௌரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

சிவகங்கை நகரில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து முன்னாள் அமைச்சரின் உறவினர் கட்டிய மூன்று கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
x
சிவகங்கை நகரில் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து முன்னாள் அமைச்சரின் உறவினர் கட்டிய மூன்று கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உறவினர்கள் ஆக்கிரமித்த 9 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்க உயர்நீதிமன்ற கிளை கடந்த சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. இதையடுத்து சிவகங்கை கவுரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆய்வு நடத்திய இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி, ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்ற உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மூன்று கான்கிரீட் கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. சிவகங்கை டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்