தமிழகத்தில் இன்று 4,481 பேருக்கு கொரோனா- ஒரே நாளில் 102 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது
x
தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 84 ஆயிரத்து 177 ஆக அதிகரித்துள்ளது. 
கொரோனாவுக்கு ஒரே நாளில் 102 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 721 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 5 ஆயிரத்து 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 37 ஆயிரத்து 526 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவைக்கு அடுத்து ஈரோட்டில் 411 பேரும், சேலத்தில் 279 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.திருப்பூரில் 256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 249 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்