சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு.. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை

களியக்காவிளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான நபரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு.. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை
x
சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு.. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை 

களியக்காவிளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான நபரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த  சிறப்பு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை சம்வத்தில் தொடர்புடைய ஜியாபுதீன் உள்ளிட்ட சிலரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து பெங்களூர் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் ஜியாபுதீனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதற்காக பெங்களூருவில்  இருந்து ஜியாபுதீனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்.ஐ.ஏ அதிகாரிகள் பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.மனுவை விசாரித்த நீதிபதி,  ஜியாபுதீனை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.  ஜூலை 1 ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஜியாபுதீனை, என்.ஐ.ஏ. அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க அழைத்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்