தமிழகத்தில் இன்று புதிதாக 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று புதிதாக 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 7ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 49 ஆயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு ஒரே நாளில் 155 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 901 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 9 ஆயிரத்து 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 49 ஆயிரத்து 845 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story