பரோட்டா மாஸ்டர் கழுத்தறுத்து கொலை.. பெண்ணுடன் முறையற்ற உறவால் கொலை?

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பரோட்டா மாஸ்டர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார்.
பரோட்டா மாஸ்டர் கழுத்தறுத்து கொலை.. பெண்ணுடன் முறையற்ற உறவால் கொலை?
x
பரோட்டா மாஸ்டர் கழுத்தறுத்து கொலை.. பெண்ணுடன் முறையற்ற உறவால் கொலை? 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பரோட்டா மாஸ்டர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கம்புளி கிராமத்தைச் சேர்ந்த 26 வயது மகாதேவன், கேரளாவில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்துள்ளார். ஊரடங்கால், சொந்த ஊரான கம்புளிக்கு திரும்பிய நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வேறொரு மகாதேவனுக்கு,  பெண் ஒருவருடன் தொடர்பு இருந்து வந்தாக தெரிகிறது. இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பரோட்டா மாஸ்டர் மகாதேவன் அப்பெண்ணுடன் பேசி வந்தாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில்  வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பரோட்டா மாஸ்டர் மகாதேவன்  கழுத்தை அறுத்து கெலை செய்யப்பட்டார். உடலை கைப்பற்றிய ஆய்க்குடி போலீசார் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்த கொலையாளியிடம் விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது..

Next Story

மேலும் செய்திகள்