கூடுதலாக 10 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கூடுதலாக 10 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
கூடுதலாக 10 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
 
10 அவசர கால ஆம்புலன்ஸ் சேவையை, முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக கரூர் வைஸ்யா வங்கி ஒரு கோடியே 77 லட்சம் மதிப்பிலான 10 அவசர கால ஊர்திகளை தமிழக அரசுக்கு வழங்கி உள்ளது. இவற்றை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 8 ஆம்புலன்ஸ்கள் மலைப்பகுதியிலும், 2 ஆம்புலன்ஸ்கள் மற்ற இடங்களிலும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்