27,142 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு

நாடு முழுவதும் தற்போது கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 27 ஆயிரத்து 142 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
27,142 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு
x
27,142 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு 

நாடு முழுவதும் தற்போது கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 27 ஆயிரத்து 142 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில், லிபோசோமல் ஆம்போடெரிசின் பி மருந்தின் தயாரிப்பு, கடந்த ஏப்ரல் மாதத்தில் வெறும் 62 ஆயிரம் குப்பிகளாக இருந்தது.இப்போது ஜூன் மாதத்தில் 3 லட்சத்து 75 ஆயிரத்தை கடந்துள்ளது.அதே சமயம் 9 லட்சத்து ஐந்தாயிரத்து லிபோசோமல் ஆம்போடெரிசின் மருந்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மே 11-ந் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 7 லட்சத்து 28 ஆயிரத்து 45 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி மருந்து ஒதுக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் இந்த ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு இதுவரை 25 ஆயிரத்து 260 குப்பிகள் ஆம்போடெரிசின்-பி மருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 

Next Story

மேலும் செய்திகள்