"இ-மெயில் அமைப்பு பாதுகாப்பாக உள்ளது" - மத்திய அரசு விளக்கம்

மத்திய அரசின் இ-மெயில் அமைப்பில் சைபர் அத்துமீறல் எதுவும் நடைபெறவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
x
மத்திய அரசின் இ-மெயில் அமைப்பில் சைபர் அத்துமீறல் எதுவும் நடைபெறவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏர் இந்தியா, பிக் பேஸ்கட் மற்றும் டொமினோஸ் போன்ற அமைப்புகளில் கம்ப்யூட்டர் தரவுகளில் நடந்த அத்துமீறல்கள் ,  தேசிய தகவல் மையம் நிர்வகிக்கும் மத்திய அரசின் இ-மெயில்கள் மற்றும் கடவுச்சொற்களை கம்ப்யூட்டர் ஊடுருவல்காரர்களுக்கு தெரிவித்து விட்டதாக ஊடகம் ஒன்றில் தகவல் வெளியானது.  இதனை மறுத்துள்ள மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், என்ஐசி நிர்வகிக்கும் மத்திய அரசின், இமெயில் அமைப்பு முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்