"ஆய்வு பணியின் போது ஆடம்பர ஏற்பாடுகள் வேண்டாம்" - இறையன்பு

மாவட்டங்களுக்கு ஆய்வு பணிக்காக வரும் போது ஆடம்பர ஏற்பாடுகள் வேண்டாம் என தலைமைசெயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பல்வேறு மாவட்டங்களில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர் எழுதியுள்ள கடித‌த்தில்..

* மாவட்டங்களில் ஆய்வு பணிக்காக வரும் போது  ஆடம்பர ஏற்படுகள் எதுவும் வேண்டாம் தெரிவித்து உள்ளார்,

* காலை மற்றும் இரவு நேரங்களில் எளிமையான உணவு வழங்கினால் போதும் எனவும்,

* மதியம், இரண்டு காய்கறிகளுடன் சைவ உணவு போதும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* மேலும் ஆடம்பர ஏற்பாடுகளில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும் தலைமை செயலாளர் குறிப்பிட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்