ஊரடங்கை பயன்படுத்தி திருட்டு சம்பவம் - ஆடுகளை காரில் திருடி சென்ற தம்பதி

சென்னை அடுத்த கொரட்டூரில் காரில் வந்து ஆடுகளை திருடி சென்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊரடங்கை பயன்படுத்தி திருட்டு சம்பவம் - ஆடுகளை காரில் திருடி சென்ற தம்பதி
x
சென்னை அடுத்த கொரட்டூரில் காரில் வந்து ஆடுகளை திருடி சென்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போத்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இந்திராணி என்பவர், தனது வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த ஆடுகளை காணவில்லை என கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குபதிந்த போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கைக்குழந்தையுடன் காரில் வந்த தம்பதி, ஆடுகளை திருடி காரில் பறந்தது தெரியவந்நது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட காரின் பதிவெண் வைத்து போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்